Tuesday, October 12, 2010

தாத்தாவின் சிரிப்பு

ராமண்ணாவுக்கு கிட்ட தட்ட எண்பது ஆகிறது.உடம்பு கொஞ்சம் ஒடுங்கினாலும் பலமாகத்தான் இருக்கிறார்.கண்ணு,காது எல்லாம் சரியாக இருக்கு.மூன்று பிள்ளைகள் மூன்று பெண்கள் பக்கத்திலேயே தான் தனித் தனியாக குடி இருக்கிறார்கள்.சரோஜா மாமிக்கு கூட மாட ஒத்தாசைக்கு ஒரு பொண்ணு .வீட்டோட இருக்கு.எல்லோரும் அடிக்கடி வந்துண்டு போயிண்டு இருப்பார்கள்.ராமண்ணாவுக்கு பணப் பசை உண்டு...கஷ்ட ஜீவனம் இல்லை. இருந்தாலும் இந்த வயசான காலத்தில் மனைவியோட தனியாகத்தான் சமாளிச்சுண்டு இருக்கார்.மாமிக்கு தள்ளாமை வந்துடுத்து. .சலிச்சுண்டே இருப்பா. .சட்டு புட்டுன்னு எழுந்துக்க முடியாது. இவரோ நொடிக்கு நொடி வெந்நீர் கொண்டு வா,கண்ணாடி எடுத்துண்டு வா ன்னு தொந்திரவு பண்ணிண்டே இருப்பார். பசங்கள் ஒண்ணும் காதுல போட்டுக்கற மாதிரி தெரியலை..

கார்த்தாலை ஏழு மணியாகிறது .இதுக்குள்ள பத்து தடவையாவது காபி ஆச்சான்னு பூனை குட்டி மாதிரி சமையல் உள்ளுக்கு வந்து இருப்பார்.ஆனால் இன்னைக்கு சப்தமே இல்லை. மாமி காலை தேச்சுண்டு தேச்சுண்டு போனா. மலங்க மலங்க முழிச்சு பார்த்துண்டே இருக்கார்."ஏன்னா என்ன ஆச்சு இன்னைக்கு?உடம்பு முடியலையா? ஏன் இப்படி முழிச்சி பார்த்துண்டே இருக்கேள்?" மாமி கவலையோடு கேட்டார்.

பதிலே இல்லை.வெறிச்சு பார்த்துண்டு இருக்கார் மாமி மூஞ்சியை...மாமிக்கு ஒரே பயமாயிடுத்து.."அடியே மங்களா,போனை போட்டு பசங்களை உடனே வர சொல்லு" னு கத்தினாள். “போறாத தலை வலிக்கு இந்த பிராம்மணன் சித்த பிரமை பிடிச்சமாதிரி இருக்காரே.நான் என்ன பண்ணுவேன்?நன்னா இருக்கச்சயே தொந்திரவு தாளலை. இது என்ன திருகு வலி நான் என்னவெல்லாம் அனுபவிக்க போறேனோ தெரியலையே னு புலம்ப ஆரம்பிச்சுட்டா.

மூத்த பிள்ளை சப்தமா கத்தினான் "அப்பா என்னது இது கலாட்டா பண்றேள் காலங் கார்த்தாலை. கேட்டா பதில் சொல்லாம இருந்தா எப்படி?" அதுக்கும் முழிச்சு பார்த்துண்டு இருக்கார் மோட்டு வளையை பார்த்துண்டு..காது கீது கேக்கலையோனு டபராவை கீழ போட்டான். .உடனே திரும்பி பார்க்கறார்.அதே வெறிச்ச பார்வை யாரையும் அடையாளம் கண்டு கொள்ளாமல்.

சின்ன பிள்ளை ரொம்ப மெள்ளமா கேட்டான் 'அப்பா,என்ன பண்றது உடம்புக்கு.ஏதாவது கஷ்டமா இருக்கா?.டாக்டர் ஐ வர சொல்லி இருக்கு.வாயை திறந்து ஒரு வார்த்தை சொன்னா போறும். .எல்லாருக்கும் கவலையா இருக்கு நீங்க இப்படி மௌனமா இருந்தால்'.

மாமி அழ ஆரம்பிச்சுட்டால் “இவரை வெச்சுண்டு தனியா நான் என்ன பண்ணுவேன்?போக்கிடமே இல்லையே எனக்கு .ஏன் பகவான் இப்படி என்னை சோதனை பண்றாரோ?” ' இரண்டு மாட்டு பொண்ணுகளும் தலையை திருப்பிண்டு வேற எங்கயோ பார்த்துண்டு இருந்தார்கள்.

டாக்டர் வித வித மாக டெஸ்ட் எல்லாம் பண்ணி பார்த்துட்டு "எல்லாம் சரியாகத்தான் இருக்கு.என்ன வென்று புரியலை.கொஞ்சம் நாளாகட்டும். பிறகு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்" என்றார்.

பொண்ணு "அம்மாவால தனியா பார்த்ததுக்க முடியாதே.நீங்கள்ளாம் .என்ன பண்றதா உத்தேசம் ? னு அண்ணன்களை பார்த்தவாறு சொன்னாள்

மூத்தவன் "நான் இருக்கிறது 2 பெட் ரூம் பிளாட்.ரெண்டு பிள்ளை ஒரு பொண்ணு.அம்மா அப்பாக்கு இடம் எங்கே? நீயே சொல்லுனு சொன்னான்.

சின்னவன் "என்னோட மாமியார் மாமனார் கூட இருக்கிறது உனக்கு தெரியாதா என்னை.என்னமோ கேழ்க்கரயே.தம்பி வேர மும்பைல சின்ன இடத்துல இருக்கான். .நீங்க தான் யாரவது வெச்சுக்கணும்.சமயத்துக்கு உதவி பண்ணாட்டா எப்படி?"

“நாங்க ஆத்துக்காரரை கேக்கணும் .அவ்வளவு சுலபம் இல்லை.இவா ரெண்டு பேரும் தற்சமயம் இப்படியே இருக்கட்டும்.நாம்ப தினம் வந்து பார்த்துண்டு போகலாம்."னு சொன்னாள்.

"எனக்கு ஒன்று தோன்றது.எதுக்கும் வக்கீலை பார்த்து அப்பா இப்படி இருக்கார். .உயில் எழுதினாரா இல்லையானு தெரியலை.என்ன பண்றது னு கேக்கலாம்"னு பெரியவன் சொன்னான். .சின்னவனும் தலையை ஆட்டினான். அந்த கிழவர் இவ ரெண்டு பேரையும் முழுச்சி பார்த்துண்டே இருந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து அவரோட அவர் எட்டு வயது பேரன் மாத்திரம் இருந்தான். மாமி வாசல் பக்கம் தூங்கிண்டு இருந்தாள்.

"தாத்தா நீ என்னோட மட்டும் பேசுவியா?எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் "னு சொன்னான்..கிழவர் அவனை தன பக்கம் இழுத்து வெச்சுண்டு உச்சி மோந்தார்."உனக்கு என்னை பேசணும்னு சொல்லு" என்றார்.

"தாத்தா நீ நன்னா பேசறியே .உனக்கு பைத்தியம் பிடிச்சுடுத்துன்னு அம்மா சித்தி கிட்ட சொன்னாளே"னு கத்தினான்.

உஷ் சத்தம் போடாதே. இப்போதான் புரியறது யார் யார் எப்படின்னு. ..யார் கிட்டயும் சொல்லாதே" னு கிழவர் சொன்னார்.

மாமி மெல்ல வந்து "இங்க ஏதோ பேசற சப்தம் கேட்டதே" என்று கேட்டாள்.

"நான்தான் பாட்டி. .தாத்தா என்ன கேட்டாலும் பதில் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறார்.'னு பையன் பதில் சொன்னான்..

" என் தலை விதி "நு மண்டைல அடித்து கொண்டாள்

தாத்தா சிரிக்கர மாதிரி பேரனுக்கு தோணித்து.. .
.. . ...

5 comments:

  1. nalla kadhai... fact neaiya edathula appadithaan irukku. Paavam paatikku mattumaavadhu solliyirukkalaam pasangalaippathi therinjudhaannu kettirukkalaam

    ReplyDelete
  2. good for a story...but now that he knows the kind of children he has reared...he can come out of his stupor...and give them a piece of advice as how to value human relationships....

    ReplyDelete
  3. Good story. Reflects the complexities of old age,
    the situational problems of the care-takers and also brings forth the negative side of the humans.

    The children should be kind, caring and communicative with the elders. The parents should be regarded as a part of their family and not a burden.

    The parents, on their part, should be more understanding ,flexible and keep to themselves .

    Not a bad idea for the elders to keep their minds open for any change in the dusk of their lives.

    ReplyDelete
  4. In the evening of life one has to change the attitude.
    No point in lamenting that once upon a time
    i was commanding all, being the HEAD of the family.

    Today at old age your HEAD loses its importance
    and the weak flesh that your body is needs
    psychological and social support which unfortunately is lacking among present youngsters.

    No point particularly blaming anyone much less girl children who go at very early age to some one family on marriage and have their own problems.
    I agree with one of the commentators Hema that

    the children should be kind caring bla bla .
    All fine when put in practice.

    good story. hope to see more such one.

    srini562002@yahoo.com

    ReplyDelete