Thursday, October 21, 2010

பவானியின் சிரிப்பு

வீட்டில் கறிகாய் கொஞ்சம் கூட இல்லை.வாங்குவதற்கு அருகில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்றேன்.கூட்டம் அதிகம் இல்லை. காய்கள் எல்லாம் பச்சை .பசேலென்று இருந்தன.பழங்களும் தரமாக இருந்தது.. எல்லாவற்றையும் அள்ளி போட்டுகொண்டு வந்து பில் போடும் கவுன்டரில் வைத்தேன்.

22 வயது பெண்.. .சிரித்த முகம்.".வாருங்க, எல்லாம் கிடைத்துதா? ஏதாவது கிடைக்காமல் வந்துவிட்டீங்களா? பில் போடட்டுமா."என்றாள்

நானும் சிரித்தபடியே "எல்லாம் கிடைச்சது. நன்றாக வைத்து இருக்கீங்க. விலை எல்லாம் குறிச்சு இருக்கு.கஷ்டமே இல்லை.தரமும் ஒண்ணு இரண்டு தவிர நன்றாக உள்ளது" என்றேன்
"நன்றி அம்மா.எந்த ஒண்ணு இரண்டு சரியாக இல்லை என்று .சொன்னீங்கன்னா அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம்" என்றாள்.

எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை.என்ன பணிவுடனும் கரிசனத்துடனும் பேசுகிறாள் என்று ."உன் பேர் என்னம்மா.நீ எவ்வளவு நாட்களாக இங்கே பணி புரிகிறாய்?'எண்டு கேட்டேன்.

"பவானி,ஆறு மாசமா இருக்கேன்"என்றாள்

"ஆப்பிள் வாங்கிக்கலையே. சிம்லாலேந்து இன்றுதான் வந்தது'என்றவுடன் அதையும் எடுத்துக்கொண்டேன்.

"அடிக்கடி வாங்க அம்மா' என்று விடை கொடுத்தாள்.ஒரு மன நிறைவோடு வீடு சென்றும் அவள் முகம் மனதை விட்டு அகலவில்லை

நான்கு நாட்கள் கழித்து ஏனோ பரபரவென்று மறுபடியும் அதே கடைக்கு சென்றேன்.பவானியை காணவில்லை.சற்று ஏமாற்றம். கறிகாய்களை பொறுக்கி கொண்டு வந்தேன்.இன்று வேறு பெண்.அதே வயது. ஆனால் முகத்தில் சிரிப்பு இல்லை...ஒரு வித உணர்ச்சியும் இல்லை.ஒரு வார்த்தை பேசாமல் பில் போட ஆரம்பித்தாள்.உருளை கிழங்கு சற்று அதிகமாக இருந்ததால், கொஞ்சத்தை எடுத்து வைத்தேன்."முன்னாடியே சரியாக கொண்டு வந்திருக்கலாமே " என்று வெடுக்கென்று சொன்னாள்.

:அளவு சரியாக தெரியலை" என்றேன்

"பரவாயில்லை .ஆனால் நாங்க அங்கே மறுபடியும் போய் வைக்க வேண்டும்" என்றாள் ஏதோ நான் பெரிய தப்பு பண்ணினாபோல எனக்கு ஏன் இன்று இங்கே வந்தோம் என்று ஆகிவிட்டது.
500 ரூபாய் நோட்டு கொடுத்தேன்..300 ரூபாய் இல்லையா" என்றாள்

வீடு திரும்புகையில் யோசனை.. ஒரே வேலைதான்.ஒரே வயதுள்ள பெண்கள்தான்.ஆனாலும் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள்.வீட்டு சூழ்நிலையோ,அல்லது வளர்த்த விதமோ அல்லது வாழ்க்கையில் எதிர்கொண்ட ஏமாற்றங்களோ ஏதோ ஒன்று இப்படி மாறுபாடாக உருவாக்கி உள்ளது.

பவானி மாதிரி இருக்க யாராவது சொல்லி கொடுத்தால் எப்படி உலகம் இருக்கும்..கடைக்கு போய்வருவதே ஒரு சுகானுபவமாக இருக்குமே.ஒவ்வொருவரும் தினம் காலையில் இன்று பவானி மாதிரி சிரித்த முகத்துடனே இருப்போம் என்று தீர்மானித்துகொண்டால் வாழ்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். சற்று யோசித்து பாருங்கள்..
.. .

6 comments:

  1. Sending smiles on your way... :-)

    ReplyDelete
  2. Yosikka vendiya vishayam thaan. Everyone loves to be like that.

    ReplyDelete
  3. Yes, this friendliness improves our life greatly, if followed by many people. Best regards.

    ReplyDelete
  4. Instead of waiting for the girl to give a smile, could have given her a soothing,friendly smile.
    never mind the rebuff.

    Just when we step out of the house , we should make it a point to keep our facial expression relaxed and friendly so that it is easier for the other person to approach us without hesitation.

    ReplyDelete
  5. நெகிழ வைக்கும் கதை.

    ReplyDelete
  6. Yes, what Rajalakshmi says is best, first we should keep a friendly face so that others can interact with us easily. This story gives a very good message, thank you, Kp...Let me atleast try to remember this! Sandhya

    ReplyDelete