Tuesday, October 26, 2010

பாம்பின் கால் பாம்பு அறியும்

என்னோட கல்யாணத்திற்கு முன்னமேயே அந்த அம்மாளை தெரியும்..என் அம்மா வீட்டிற்கு வருவாங்க..நல்ல நிலைமையில் இருந்து நொடித்து போனவங்க, ரொம்ப சாத்வீகமான களையான முகம். .மூன்று பெண்கள்.இரண்டு பேரை எப்படியோ கரை ஏத்திட்டாங்க.பெரிய இடமில்லை.பசியில்லாமல் அவங்க வருமானம் அவங்களுக்கே போராமல் இருந்தது. மூன்றாம் பெண்ணிற்கு கல்யாணம் பண்ண வேண்டும்.பணமில்லை.. தெரிந்தவர்கள் உதவி நாடி அலைந்து கொண்டு இருக்கிறாங்க.என் அம்மாவிடம் விலாசம் வாங்கிண்டு இங்கே வந்து இருக்காங்க.அம்மாவும் 'முடிந்தால் பண உதவியோ அல்லது துணிமணியோ வாங்கி கொடு..பாவம், நல்ல நிலையிலிருந்து இப்படி கஷ்ட படறாங்க' என்று போனில் சொன்னாள்..

என் கணவரிடம் போனில் பேசி அந்த அம்மாளுக்கு ஐந்து ஆயிரம் ரூபாயும் ஒரு கைவசம் இருந்த ஒரு பட்டு புடவையும் கொடுத்தேன்."இருங்க,காபி குடித்து விட்டு போகலாம் என்றேன்.அந்த அம்மாளுக்கு ஒரே சந்தோஷம்..என்னை கட்டி அணைத்து கண்களில் தண்ணீருடன் "நான் என்ன புண்ணியம் செய்தேனோ உன்னை மாதிரி நல்லவங்க அன்பை பெற்றிருப்பதற்கு" என்றாங்க.

நான் உள்ளே இருக்கையில் வாயிலில்'அம்மா' என்று குரல் கேட்டது. யாரென்று பார்க்கையில் "அம்மா ,நான் பிள்ளையார் கோவில் வாசலில் பூ விற்கரேன், அம்மா..திடீரென்று கணவருக்கு நெஞ்சு வலி. தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கேன்..இருந்தாலும் செலவிற்கு இரெண்டாயிரம் ரூபாய் தேவை அம்மா.பல தெரிஞ்ச இடங்களில் கொஞ்சம் கொஞ்சமா சேர்க்கிறேன். .பிறகு பூ கொடுத்து கழித்து விடுகிறேன் அம்மா. .உங்களால் என்ன முடிகிறதோ தயவு செய்து கொடுங்கள் ."என்றாள்

'"இப்பொழுது வேலையா மும்முரமா இருக்கேன்.அவரும் வீட்டில இல்லை.அப்புறம் வா.பார்க்கலாம்" என்று தட்டி கழித்தேன்.எவ்வளவு நிஜமோ பொய்யோ யாருக்கு தெரியும் என்கிற எண்ணத்தோட. அவள் மேற்கொண்டு பேச இடம் கொடுக்காமல் உள்ளே சென்றேன்

எதோ பேச்சு குரல் கேட்கிறதே என்று வந்தால், அந்த வயதான மாமி அந்த பெண்ணிடம் 200 ரூபாய் கொடுத்து கொண்டு இருப்பதை பார்த்தேன்.சற்று கோபம் வந்தது சுருக்கென்று."பிச்சை எடுத்தானாம் பெருமாள் அதை பிடுங்கினானாம் ஹனுமார்'" என்கிற கதையாய் நம்ம கிட்ட தானம் வாங்கி தருமம் பண்றதை பொறுக்கவில்லை. "என்ன மாமி,உங்களுக்கு வேண்டும் என்பதால் தானே கொடுத்தேன்.அதை இப்படி வீசி எறியலாமா" என்றேன் வெடுக்கென்று.

"நீ சொல்றது நிஜம் தான். .பொய்யோ நிஜமோ தெரியாதுதான்.ஒரு வேளை உண்மையாக இருந்து ஏதாவது ஏடாகொடமா ஆகிவிட்டால் என்ன பண்றது நு பயத்தில கொடுத்தேன். நான் கஷ்ட படறதுநால எனக்கு மனதுக்கு தாளலை.என்னை மன்னிச்சுடு..உன்னை கை எடுத்து கும்பிடறேன்" என்று சொன்னாங்க.

"ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க.நானே கொடுத்து இருக்கணும்.உங்க பணம் குறையறதே என்கிற ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டேன்..இந்தாருங்கள் இன்னுமொரு ஆயிரம் ரூபாய்.எல்லாம் நல்லபடியா நடக்கும் "என்றேன்.

. .

3 comments:

  1. it is those who are in difficulty who sees the pain in the others.............

    ReplyDelete
  2. thala valiyum thirugu valiyum thanakku vandhaadhaan theriyum illaya

    ReplyDelete
  3. நெகிழ வைக்கும் கதை.

    ReplyDelete