Friday, October 5, 2012

தைய்வம் அன்றே கொடுக்கும்

ரங்கனுக்கு அப்படி ஒன்றும் பெரிய வேலை இல்லை.கஷ்ட ஜீவனம்தான்.கும்பகோணத்தில் கர்ணகொல்லை தெருவில் வாசம்.ஒண்டு குடித்தனம் தான்.மனைவி மக்களுடன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
"இந்த விடுமுறையிலாவது எங்களை சென்னைக்கு அழைத்து கொண்டு போங்க, அப்பா.நாங்க பீச்செல்லாம் பார்த்ததே இல்லை."என்றான் பெரிய மகன்
"அப்பா,எனக்கு மகாபலிபுரம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கு.பக்கத்துலதான் இருக்காம்.    .காலைல போய்விட்டு மாலையில் பஸ்ஸில் திரும்பிவிடலாமாம்." சின்னவன் சொன்னான்     
குழந்தைகள் ரொம்பவும் ஆசைபடறதே. ஒரு நடை நாலு நாள் போனால் என்னவாம். என்னோட  தங்கை  வீட்டுல  தங்கலாம்.அவளும் கூப்பிட்டு கொண்டே இருக்கா " என்றாள் மனைவி ருக்மிணி
"என்னடி முட்டாள்த்தனமா பேசறே. மாச கடைசில பணமில்லாம  இழுபறியாக ஓடிண்டு இருக்கு. இப்போ எல்லாம் கனவுலகூட நினைச்சு பார்க்க முடியாது"
பையன்கள் முகத்தை தொங்கப்போட்டு கொண்டு ஓடிவிட்டதுகள்.பாவமாக இருந்தது ரங்கனுக்கு."ருக்கு,எனக்கு தெரியும் உன்னை ஒரு இடத்துக்கும் அழைச்சிண்டு போறதில்லை.பெருமாள் கண்ணை திறக்கட்டும் பார்க்கலாம்" என்றான்.
நவராத்ரிக்கு   சில நாட்கள் முன்னர்  ரங்கனுடைய பெரியப்பா மகன் அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம் எழுதிருந்தான்.
"ரங்கா,
வருடா வருடம் சக்கிரபாணி கோவில் தாயாருக்கும் பெருமாளுக்கும் நவராத்திரியின் பொழுது புடவை வேஷ்டி சாத்துவது வழக்கம்.இந்த தடவை என்னால் வர இயலவில்லை.அம்மாவும் என் கூட இருக்கா.இத்துடன் ரூபாய் 15000 இணையாக டாலர் அனுப்பியுள்ளேன்.நல்ல காஞ்சீவரம் பட்டு புடவை,நல்ல ஜரிகை வேஷ்டி   ஒரு ஜதைபுஷ்பம் பழம் இத்யாதிகளுடன் நவராத்திரி சமயம் கொடுத்து அர்ச்சனையும் பண்ணிவிடு.மீந்த பணத்தை அர்ச்சகர்ளுக்கு போக கோவில் உண்டியில் சேர்த்து விடு.இதனால் உனக்கு ச்ரமம்  இராது என நம்புகிறேன்.
மன்னி பசங்களை விசாரித்ததாக சொல்லவும்.
அரவாமுதன்"
கையில் பணம் கிடைத்ததும் மனம் ஒரு குரங்காகியது.ஒரு விபரீத எண்ணம் கூடவே தோன்றியது.இன்னும் ஒரு வாரத்தில் நவராத்திரி ஆரம்பம்.ருக்மிணியிடம் எவ்வளவு பணம் வந்தது என்று சொல்லவில்லை. அவளை அழைத்து கொண்டு சாதாரண அபூர்வா சில்க் மாதிரி அரக்கு கலரில் பொய் ஜரிகையுடன் கூடிய புடவை,அதே மாதிரி வேஷ்டி   வாங்கினான்.எல்லாம் 3000  ரூபாய்க்கு குறைவாக பழம் புஷ்பம் சேர்த்து முடித்து விட்டான்
"இதென்ன அல்பத்தனமாக   இருக்கே மச்சினர் பண்ணுவது?.கைநிறைய சம்பாத்தியம் வேறே பெருமாளுக்கு வாங்கறதில   என்ன சுஷ்கம்?.   இந்தமாதிரி பண்ணுவதை விட பேசாமல் இருக்கலாம்.   எனக்கு இதை கொண்டு போய் கோவிலில் கொடுக்க வெட்கமாக இருக்கு.நீங்களே   கொடுத்துவிடுங்கள்" என்றாள்
"சும்மா இருடி.நீயா பண்ணுகிறாய்.வெறுமனே வாயை விடாதே" என்றான்.இருந்தாலும் மனதில் ஒரு நெருடல்.இன்னும் ஒரு 1௦௦௦ ரூபாய்க்கு பெருமாளுக்கு ஒரு சக்கரை பொங்கல் தளிகையும் நடத்தினான்.
தனியாக இருக்கையில் கை வசம் உள்ள  பணத்தை எண்ணினான்.11300 ரூபாய் இருந்தது.மனம் லேசாக வாயில் ஒரு ராக ஆலாபனை.
அன்று மாலை குடும்பத்தினருடன் டி வி  பார்க்கும் பொழுது 'டே பசங்களா,இந்த சனி காலையில் பஸ்ஸில் சென்னை பயணம்.மூன்று நாளைக்கு.பீச்சு,மால்கள்,,பாண்டி பஜார்,மகாபலிபுரம் திருக்கழுகுன்றம் எல்லாம் சுற்றி  பார்க்கலாம்.சந்தோசம்   தானே" என்றான் 
மகன்கள் இருவரும் அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு தங்கள் குதூகலத்தை தெரியப்படுத்தினர்.
"திடீர்னு இப்போ எதுக்கு பயணம்?போன மாசம் முடியவே முடியாது என்று சொன்னீங்க" என்றாள் ருக்மிணி.
வாஸ்தவம். ஆனால் எதிர்பாராமல் இப்போ ஆபீசுல கொஞ்சம் சம்பள பாக்கி கிடைத்தது"என்று ஒரு சின்ன பொய்யை சொன்னான்.."எல்லாம் தயார் பண்ணு..தங்கையிடம் சொல்லிவிடு
வெள்ளி கிழமை துணி மணியை எடுத்து வைத்ததில் ரங்கனுக்கு ஆபீசுக்கு   சற்று நேரமாகிவிட்டது.அவசரமாய் குளிக்க போனான் குளியலறைக்கு.சோப்பு தண்ணியோ என்னவோ அப்படியே வழுக்கி விழுந்தான்.நல்ல வேளை தலையில் அடிபட வில்லை.கையிலும் காலிலும் பலமாக அடி.எழுந்து கொள்ள முடியவில்லை. தாப்பாளும் போட்டு இருந்தது.ருக்மிணி,ருக்மிணி நு கத்தினான்.தலை சுற்றலும் இருந்தது.அவள் கதவை   உதைத்து திறந்தாள்.
உடனேயே பக்கத்து வீட்டு மனிதர்களின் உதவியோடு ஆஸ்பத்திரிக்கு ரங்கனை ஆம்புலன்சில் அழைத்து சென்றாள். எக்ஸ்ரே   எடுத்ததில் கையிலும் காலிலும் பலத்த முறிவு தெரிந்தது.கோணலாக இருந்ததால் சிறிய ஆபரேஷன் தேவையாக இருந்தது.கை காலிலும் பெரிய கட்டு போட்டு ஒரு நாள் வைத்து கொண்டு அடுத்த நாள் கையில் ஊன்று கோலோடு அனுப்பினார்கள்.ருக்மிணி ரங்கன் பர்சிலேந்து தான்  பணத்தை கட்டினாள். 
வீட்டிற்கு வந்ததும் முதல் கேள்வியாக "எவ்வளவு ஆச்சு, ருக்மிணி?" என கேட்டான்.அவள் பதில் கூறாமல் ஆஸ்பத்திரி பில்லை அவனிடம் கொடுத்தாள்.அவன் அவசரமாக பிரித்து  பார்த்தான்.சரியாக 11300 ரூபாய்.அப்பொழுது மண்டையில் இடி இறங்கினாற்போல் உறைத்தது.தைய்வம் தண்டனையை நின்று கொடுக்க வில்லை அன்றே கொடுத்து விட்டது என்று.
 ,      

.
 ,                   

11 comments:

  1. Vasanta Rajagopalan writes

    பார்த்தா சார்,மிகவும் நேர்த்தியாகவும் மென்மையாகவும் ஒரு பெரிய தத்துவத்தையே உணர்த்தி விட்டீர் .
    ரங்கன் ஏமாற்றியது யாரை? கடவுளையோ அல்லது அரவாமுதனையோ அல்ல . ரங்கன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டான் .
    வசந்தா.ரா.

    ReplyDelete
  2. Cyber nag writes
    இப்படியும் சில நல்ல உள்ளங்கள் உலகில் இருக்கின்றன. படித்து கண்கள் பனித்தன.

    ReplyDelete
  3. Very nice. God is watching each and every action and thought of ours, a lesson waits for every wrong step taken.

    ReplyDelete
  4. Great story, all actions and thoughts of us are watched my the almighty and a lesson waits for a wrong deed.

    ReplyDelete
  5. Very nice. God is always with every one & watching the activities. It is not a punishment to Rangan. Leading him to correct path.

    pss

    ReplyDelete
  6. Lakshmi Gopal writes
    very nice story. Your style is a lot like Sujatha. You should now start big novels. Lakshmi

    ReplyDelete
  7. it is alesson whoever read the story not to think of others money nice one

    ReplyDelete
  8. தைய்வம் தண்டனையை நின்று கொடுக்க வில்லை
    அன்றே கொடுத்து விட்டது !.

    தண்டனை மனஹை நிமிர்த்தினால் சரி!

    ReplyDelete
  9. ஆஹா! இப்படியும் உருக்கமாக உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியுமா?

    ReplyDelete