Thursday, November 18, 2010

பொறுமையின்மை

காலை நேரம். ராகவன் டெலிபோனில் வாசல் ரூமில் ரொம்ப முக்கியமா பேசிக்கொண்டு இருக்கிறார்.அவர் ஆறு வயது குழந்தை அவருடைய காலை பற்றி "அப்பா,அப்பா "னு கூப்பிடறது.

"தூர போ.தொந்திரவு பண்ணாதே" னு சள்ளுன்னு விழுந்தார்.

குழந்தை நகராமல் 'அப்பா,அப்பா ,கொஞ்சம் கேளேன்' னு சொல்லறது.

"சனியனே,சொன்னா கேழ்கமாட்டே.இந்த க்ஷணம் போகலையானா
கொன்னுபுடுவேன்.ஜாக்கிரதை" னு கத்தறார்.

அதுவோ அடமாக "அப்பா கொஞ்சம் இங்க வா'னு . கையை பிடிச்சு இழுத்தது.

ராகவனுக்கு ஒரே கோபம் வந்துடுத்து."sorry,one second, will be right back"னு சொல்லிட்டு அந்த குழந்தை முதுகில சாத்தினார் ஒரு அறை.
"அப்பா,, சமையல் உள்ளே அம்மா மயக்கமா கீழ விழுந்துட்டா.gas ஒரே எரியறது .பயமா இருக்கு"னு அழுதுண்டே உள்ளே ஓடறது

Sunday, November 14, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர்-4

தஞ்சை பெரிய கோவில்
நாங்கள் சமீபத்தில் குடும்பத்தோடு தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் சென்று இருந்தோம்.பார்த்தவுடனேயே அதன் கம்பீரமும் பிரம்மாண்டமும்.எங்களை ஒரு பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது..சரி,மிகவும் கவனமாகவும் உன்னிப்பாகவும் பார்க்க தீர்மானித்து யாராவது வழிகாட்டினர் (guide)அகப்படுவாரா என்று கண்களை சுழல விட்டோம்..ஒரு அறுபது வயதுள்ள நபர் அருகில் வந்து "கூட்டமாக வந்து இருக்கிறீர்களே, இதுதான் முதல் தடவையா" என்று கேட்டார்..

“ஆமாம்” என்றோம் '

“சரி என்னுடன் வாருங்கள். எல்லாவற்றையும் விவரமாக சொல்கிறேன். .நான் பல தடவை வந்து இருக்கிறேன்" என்றார். மிகவும் நல்லதாக போச்சு என்று அவருடன் வழி நடக்கலானோம்.

ஒரு ஒரு இடமாக நின்று அவசரப்படாமல் முக்யமான அம்சங்களை விவரித்தார்.. அவர் சொன்னதின் சாராம்சம் சுருக்கமாக இதுதான்.

.இது பழமையான சிவாலயங்களில் ஒன்று.. இந்த ஆலயம் சமீபத்தில் தனது 1000 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது. .தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன் கி.பி. 1010-ல் 216 அடி உயரமுள்ள இந்தக் கோவிலை கட்டினார்.

.ராஜராஜ சோழனால் கட்டப் பெற்ற கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற கோவிலாகத் கருதப்படுகிறது.. "கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது".இக்கோவில், உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, அமைந்துள்ளது இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள், மிக அழகாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது.

இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்ல உதாரணமாகும்.. இந்த கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்த நந்தி 14 மீ உயரம், 7 மீ நீளம், 3 மீ அகலம் கொண்டது.

இந்த கோவிலில் 35 உட்கோயில்கள் உள்ளது.. நான்கு திசைகளிலும் இந்த உட்கோயில்கள் உள்ளன.

இக்கோயிலின் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழாது.

எல்லாம் செவ்வனே சுற்றி பார்த்தபிறகு அவரிடம் மிகுந்த நன்றி சொல்லி 500 ரூபாயை நீட்டினோம்.அவர் சிரித்துகொண்டே "நான் guide இல்ல நான் ஒரு archealogist .குடும்பமாக ஆவலுடன் வந்து இருப்பதால் உங்களுக்கு உதவலாமே என்கிற எண்ணத்துடன் வந்தேன்..திருப்தியாக இருந்ததா?'என்றார்

ஒரு வெட்க உணர்ச்சியுடன் "தவறாக மதிப்பிட்டதற்கு மன்னிக்கவும்..உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..சென்னை வந்தால் கட்டாயமாக எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். "என்று விலாசத்தை கொடுத்தோம்.

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.. .


Sunday, November 7, 2010

பாட்டியின் வைராக்கியம்

ரங்கநாயகிக்கு 80 வயதுக்கு மேல இருக்கும்.நகரத்தில பெரிய பெண்ணோடு இருக்கிறாள். .கிராமத்தை விட்டு 21 ஆம் வயதுல வந்தது தான்,அப்புறம் அந்த பக்கம் காலை வைக்கவே இல்லை.சொந்த பந்தங்கள் எல்லாம் அங்கதான்.இருந்தாலும் ஒரு வைராக்யமா போகமாட்டேன்னு ஒரே பிடிவாதமாக இவ்வளவு வருஷங்கள் தள்ளியாச்சு..நல்லது கெட்டது எதுக்கும் போகலை.அவள் அப்பா,அம்மா போனப்போதுகூட எவ்வளவு சொல்லியும் மசியலை.

யாருக்கும் என்ன காரணம்னு சரியாகத் தெரியவில்லை..அரசல் புரசலாக காதுல விழுந்தது ஏதோ ஒரு மன வெறுப்பினால வந்தாள்னு மட்டும் தெரியும்.. கூடபிறந்தவர்களும் அவர்களாக வந்து பார்த்தால் தான் உண்டு. பாட்டியின் செல்லப்பேத்தி சரோஜாக்கும் தெரியாது.அவர்கள் இரண்டு பேரும் அவ்வளவு அன்யோன்யம்..எல்லா விஷயங்களும் பரிமாறிக்கொள்வார்கள்.

.இப்படி இருக்கையில் திடீரென்று போன வாரம் கொள்ளுப்பேரனுக்கு கல்யாணம்னு கிராமத்துக்கு போயிருக்கா. எல்லோருடைய மண்டைகளுக்குள் ஒரே குடைச்சல்.இத்தனை நாட்களாக போகாதவள் இப்போ மாத்திரம் ஏன் போனாள்னு. .சரோஜவிடமும் எதனால இப்படி மன மாற்றம்னு பாட்டி சொல்லவில்லை.

சரோஜாவின் மனதில் பாட்டியோட அண்ணன் கொஞ்சம் நாட்களுக்கு முன்னே வந்து போனதிலிருந்து பாட்டியிடம் ஒரு வித்தியாசம் தென்பட்டது. அவர்கள் இருவரும் ஏதோ கசமுசு வென்று பேசினது இவளுக்கு ஆச்ச்சர்யமாகக்கூட இருந்தது..ஆனால் பாட்டியும் ஒன்றும் சொல்லவில்லை,இவளும் கேட்கவில்லை.

பிறகு ஒரு நாள் மூட்டை முடிச்சோடு பக்ஷணம் பணியாரம் ,கறிகாய் நு ஏகப்பட்ட சாமான்களுடன் வந்து இறங்கினாள்.முகத்தில் ஒரு சிரிப்புடன் கூடிய சந்தோஷம்.

ஒரு வாரம் கழித்து பாட்டியும் பேத்தியும் தனியாக தாழ்வாரத்தில் இருந்தார்கள்.

."பாட்டி, உன்னை ஒரு கேள்வி கேட்பேன். .நமக்குள் ஒளிவு மறைவு இல்லையே. .பதில் சொல்வாயா?".

"தாராளமா கேளு,கண்ணு..உன் கிட்ட என்ன ரகசியம்?"

"இவ்வளவு வருஷங்களுக்கு அப்புறம் கிராமத்துக்கு கல்யாணம்நு சொல்லிட்டு போயிருக்கே .இத்தனை நாட்களாக ஏன் போகலை. .இப்போ ஏன் திடீர் என்று உன்னோட வைராக்யத்தை விட்டு கொடுத்தாய்?" .என சரோஜா கேட்டாள்.

கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு பாட்டி சொல்ல ஆரம்பித்தாள்.

"இந்த ரகசியத்தை அறுபது வருஷமா என் உள்ளேயே புதைச்சு வைத்து இருந்தேன்.உன்னிடம் சொல்வதில் எனக்கு ஒரு ஆக்ஷேபனையும் இல்லை..உன்னிடம் மாத்திரம் வைத்து கொள்..
அப்போ உன் வயது தான் இருக்கும்.ஒருவன் அழகில் மயங்கி அவன் பேச்சை நம்பி என்னை இழந்தேன்.நான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் குழந்தை தன்னுடையது இல்லை என்று அபாண்டமாக புளுகினான்.எவ்வளவு கெஞ்சியும் என்னை மணம் புரிய மறுத்தான். அவன் முகத்தில் காரி உமிழ்ந்து 'உன் முகத்தில் இனி முழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இந்த ஊரில் என் ஆயாவிடம் வந்தது தான்..இங்குதான் உன்னோட பெரிய மாமன் பிறந்தான்.. அந்த கயவன் முகத்தை தப்பி தவறிகூட பார்க்க கூடாது என்று தன் நான் அங்கு போகவே இல்லை.' என்றாள்.

"இப்போ மாத்திரம் ஏன் போனாய்" என்று சரோஜா கேட்டாள்..

"அதுவா? கொஞ்சம் நாட்கள் முன்னாலே என்னோட அண்ணன் வந்திருந்தாரே. அப்பொழுது அவர் அந்த அயோக்யன் இறந்து விட்டதாகவும் இனி நான் அங்கு வர ஒரு தடையுமில்லை என்றார்..கல்யாணத்திற்கு நான் கட்டாயம் வரணும்நு வற்புறுத்தினார்.இதுதான் ரகசியம். இப்போ திருப்தியா?.உன் மண்டை குடைச்சல் போச்சா?' என்று சிரித்தவாரே கேட்டாள்.

பாட்டி தன்னுடைய திட வைராக்யத்தை எப்படி இவ்வளவு வருஷங்கள் காப்பற்றினாள் என்கிற எண்ணத்தில் சரோஜாவின் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது.
. ..

Thursday, November 4, 2010

கோவில்களிலும் சூப்பர் ஸ்டாரா?

அண்மையில் கும்பகோணம் சென்று இருந்தேன்.அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமாக கோவில்களாம்..பல கோவில்கள்ஆழ்வார்களாலும் ,நாயன்மார்களாலும் பாடபட்ட முக்யமான பாடல் ஸ்தலங்கள்.. கிரமமாக பூஜை புனஸ்காரங்கள் நடந்து வருகிறது.

நான் போன சமயத்தில் பல கோவில்களில் கும்பல் அதிகமாக தென் படவில்லை. ஆனால் சில கோவில்களில் உதாரணத்திற்கு (ஸ்ரீரங்கம்) கூட்டம் அலைமோதுகிறது.பல இடங்களில் ஓரிருவர் தவிர யாரும் தென்படவில்லை.தைய்வங்களில் கூட அதிர்ஷ்டம் சிலருக்குத்தான் உண்டு போலும்!. .பாடல் ஸ்தலங்களில் கூட இந்த வித்யாசம் தெரிகிறது..ஏன் இப்படி?

சினிமா ஹீரோக்களில் தான் ஓரிருவருக்கு தனிப்பட்ட அந்தஸ்து கிடைக்கறது. நடிப்புக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்லை.அழகிற்கும் பெயருக்கும் கூட சம்பந்தமில்லை.அதே மாதிரி கோவில்களிலும் சில இடத்திற்கு தான் தனி சிறப்பு.. நான் பார்த்த சில கோவில்களில் விக்ரகங்கள் மிக அழகாகவும் கண்ணை பறிக்கும் பொலிவோடு மிளிர்ந்தன.இருந்தும் கூட்டமே இல்லை.அழகுக்கும் கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை போலும்..அங்கும் ஒரு முக ராசிதானா?

திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற பணக்கார கோவில்களில் உண்டியல்கள் பக்தர்களால் போடுகின்ற காணிக்கையால் ரொம்பி வழிகின்றன. அதே சமயம் இன்னுமொரு கோவிலில் அர்ச்சகர் "தீபாவளி வருகிறது.புது புடவை வேஷ்டி தாயாருக்கும் பெருமாளுக்கும் தேவை படுகிறது.பத்தாயிரம் ரூபாய் ஆகும்.பக்தர்கள் உதவி தேவை" என்று கூறினார்..மனம் ரொம்ப சங்கடப்பட்டது.

வருமானம் உள்ள பெரிய கோவில்கள் தங்கள் வருமானத்தை தங்களுக்கே முழுவதையும் உபயோக படுத்தாமல் ஒரு சிறிய பாகத்தை ஏனைய சிறிய கோவில்களுக்கு(பாடல் ஸ்தலங்களுக்காவது உதவும்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை..இல்லாவிட்டால் இது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

இன்னுமொரு எண்ணம்.கோவில்களைக்கூட டி கடைகள் போல அளவுக்கு மீறி ஒரே இடத்திலோ அல்லது ஊரிலோ .கட்டுவது சரியாகப்படவில்லை.ராஜாக்கள் கட்டின பழைய கோவில்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இனியாவது புதிய கோவில்கள் ஒரே இடத்தில் உருவாகுவதை அனுமதிக்க வேண்டுமா என்பது என் கேள்வி. ...