Sunday, November 7, 2010

பாட்டியின் வைராக்கியம்

ரங்கநாயகிக்கு 80 வயதுக்கு மேல இருக்கும்.நகரத்தில பெரிய பெண்ணோடு இருக்கிறாள். .கிராமத்தை விட்டு 21 ஆம் வயதுல வந்தது தான்,அப்புறம் அந்த பக்கம் காலை வைக்கவே இல்லை.சொந்த பந்தங்கள் எல்லாம் அங்கதான்.இருந்தாலும் ஒரு வைராக்யமா போகமாட்டேன்னு ஒரே பிடிவாதமாக இவ்வளவு வருஷங்கள் தள்ளியாச்சு..நல்லது கெட்டது எதுக்கும் போகலை.அவள் அப்பா,அம்மா போனப்போதுகூட எவ்வளவு சொல்லியும் மசியலை.

யாருக்கும் என்ன காரணம்னு சரியாகத் தெரியவில்லை..அரசல் புரசலாக காதுல விழுந்தது ஏதோ ஒரு மன வெறுப்பினால வந்தாள்னு மட்டும் தெரியும்.. கூடபிறந்தவர்களும் அவர்களாக வந்து பார்த்தால் தான் உண்டு. பாட்டியின் செல்லப்பேத்தி சரோஜாக்கும் தெரியாது.அவர்கள் இரண்டு பேரும் அவ்வளவு அன்யோன்யம்..எல்லா விஷயங்களும் பரிமாறிக்கொள்வார்கள்.

.இப்படி இருக்கையில் திடீரென்று போன வாரம் கொள்ளுப்பேரனுக்கு கல்யாணம்னு கிராமத்துக்கு போயிருக்கா. எல்லோருடைய மண்டைகளுக்குள் ஒரே குடைச்சல்.இத்தனை நாட்களாக போகாதவள் இப்போ மாத்திரம் ஏன் போனாள்னு. .சரோஜவிடமும் எதனால இப்படி மன மாற்றம்னு பாட்டி சொல்லவில்லை.

சரோஜாவின் மனதில் பாட்டியோட அண்ணன் கொஞ்சம் நாட்களுக்கு முன்னே வந்து போனதிலிருந்து பாட்டியிடம் ஒரு வித்தியாசம் தென்பட்டது. அவர்கள் இருவரும் ஏதோ கசமுசு வென்று பேசினது இவளுக்கு ஆச்ச்சர்யமாகக்கூட இருந்தது..ஆனால் பாட்டியும் ஒன்றும் சொல்லவில்லை,இவளும் கேட்கவில்லை.

பிறகு ஒரு நாள் மூட்டை முடிச்சோடு பக்ஷணம் பணியாரம் ,கறிகாய் நு ஏகப்பட்ட சாமான்களுடன் வந்து இறங்கினாள்.முகத்தில் ஒரு சிரிப்புடன் கூடிய சந்தோஷம்.

ஒரு வாரம் கழித்து பாட்டியும் பேத்தியும் தனியாக தாழ்வாரத்தில் இருந்தார்கள்.

."பாட்டி, உன்னை ஒரு கேள்வி கேட்பேன். .நமக்குள் ஒளிவு மறைவு இல்லையே. .பதில் சொல்வாயா?".

"தாராளமா கேளு,கண்ணு..உன் கிட்ட என்ன ரகசியம்?"

"இவ்வளவு வருஷங்களுக்கு அப்புறம் கிராமத்துக்கு கல்யாணம்நு சொல்லிட்டு போயிருக்கே .இத்தனை நாட்களாக ஏன் போகலை. .இப்போ ஏன் திடீர் என்று உன்னோட வைராக்யத்தை விட்டு கொடுத்தாய்?" .என சரோஜா கேட்டாள்.

கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு பாட்டி சொல்ல ஆரம்பித்தாள்.

"இந்த ரகசியத்தை அறுபது வருஷமா என் உள்ளேயே புதைச்சு வைத்து இருந்தேன்.உன்னிடம் சொல்வதில் எனக்கு ஒரு ஆக்ஷேபனையும் இல்லை..உன்னிடம் மாத்திரம் வைத்து கொள்..
அப்போ உன் வயது தான் இருக்கும்.ஒருவன் அழகில் மயங்கி அவன் பேச்சை நம்பி என்னை இழந்தேன்.நான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் குழந்தை தன்னுடையது இல்லை என்று அபாண்டமாக புளுகினான்.எவ்வளவு கெஞ்சியும் என்னை மணம் புரிய மறுத்தான். அவன் முகத்தில் காரி உமிழ்ந்து 'உன் முகத்தில் இனி முழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இந்த ஊரில் என் ஆயாவிடம் வந்தது தான்..இங்குதான் உன்னோட பெரிய மாமன் பிறந்தான்.. அந்த கயவன் முகத்தை தப்பி தவறிகூட பார்க்க கூடாது என்று தன் நான் அங்கு போகவே இல்லை.' என்றாள்.

"இப்போ மாத்திரம் ஏன் போனாய்" என்று சரோஜா கேட்டாள்..

"அதுவா? கொஞ்சம் நாட்கள் முன்னாலே என்னோட அண்ணன் வந்திருந்தாரே. அப்பொழுது அவர் அந்த அயோக்யன் இறந்து விட்டதாகவும் இனி நான் அங்கு வர ஒரு தடையுமில்லை என்றார்..கல்யாணத்திற்கு நான் கட்டாயம் வரணும்நு வற்புறுத்தினார்.இதுதான் ரகசியம். இப்போ திருப்தியா?.உன் மண்டை குடைச்சல் போச்சா?' என்று சிரித்தவாரே கேட்டாள்.

பாட்டி தன்னுடைய திட வைராக்யத்தை எப்படி இவ்வளவு வருஷங்கள் காப்பற்றினாள் என்கிற எண்ணத்தில் சரோஜாவின் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது.
. ..

3 comments:

  1. பாட்டியின் வைராக்கியம் - கதை ரொம்ப நல்லா இருக்குதுங்க....

    ReplyDelete
  2. Everyone has a skeleton in the cupboard, of course, the intensity of secrecy varying in degrees from person to person.And usually the deadly secret would have bought shame to the concerned family if it were divulged.It takes a lot of grit and mental strength to seal the secret in your heart and take it to the grave with you.
    The author has deftly touched upon a delicate and sensitive subject.The readers do not hold the grandmother in contempt even after knowing her secret.
    Vasanta.R.

    ReplyDelete