Thursday, November 4, 2010

கோவில்களிலும் சூப்பர் ஸ்டாரா?

அண்மையில் கும்பகோணம் சென்று இருந்தேன்.அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமாக கோவில்களாம்..பல கோவில்கள்ஆழ்வார்களாலும் ,நாயன்மார்களாலும் பாடபட்ட முக்யமான பாடல் ஸ்தலங்கள்.. கிரமமாக பூஜை புனஸ்காரங்கள் நடந்து வருகிறது.

நான் போன சமயத்தில் பல கோவில்களில் கும்பல் அதிகமாக தென் படவில்லை. ஆனால் சில கோவில்களில் உதாரணத்திற்கு (ஸ்ரீரங்கம்) கூட்டம் அலைமோதுகிறது.பல இடங்களில் ஓரிருவர் தவிர யாரும் தென்படவில்லை.தைய்வங்களில் கூட அதிர்ஷ்டம் சிலருக்குத்தான் உண்டு போலும்!. .பாடல் ஸ்தலங்களில் கூட இந்த வித்யாசம் தெரிகிறது..ஏன் இப்படி?

சினிமா ஹீரோக்களில் தான் ஓரிருவருக்கு தனிப்பட்ட அந்தஸ்து கிடைக்கறது. நடிப்புக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்லை.அழகிற்கும் பெயருக்கும் கூட சம்பந்தமில்லை.அதே மாதிரி கோவில்களிலும் சில இடத்திற்கு தான் தனி சிறப்பு.. நான் பார்த்த சில கோவில்களில் விக்ரகங்கள் மிக அழகாகவும் கண்ணை பறிக்கும் பொலிவோடு மிளிர்ந்தன.இருந்தும் கூட்டமே இல்லை.அழகுக்கும் கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை போலும்..அங்கும் ஒரு முக ராசிதானா?

திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற பணக்கார கோவில்களில் உண்டியல்கள் பக்தர்களால் போடுகின்ற காணிக்கையால் ரொம்பி வழிகின்றன. அதே சமயம் இன்னுமொரு கோவிலில் அர்ச்சகர் "தீபாவளி வருகிறது.புது புடவை வேஷ்டி தாயாருக்கும் பெருமாளுக்கும் தேவை படுகிறது.பத்தாயிரம் ரூபாய் ஆகும்.பக்தர்கள் உதவி தேவை" என்று கூறினார்..மனம் ரொம்ப சங்கடப்பட்டது.

வருமானம் உள்ள பெரிய கோவில்கள் தங்கள் வருமானத்தை தங்களுக்கே முழுவதையும் உபயோக படுத்தாமல் ஒரு சிறிய பாகத்தை ஏனைய சிறிய கோவில்களுக்கு(பாடல் ஸ்தலங்களுக்காவது உதவும்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை..இல்லாவிட்டால் இது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

இன்னுமொரு எண்ணம்.கோவில்களைக்கூட டி கடைகள் போல அளவுக்கு மீறி ஒரே இடத்திலோ அல்லது ஊரிலோ .கட்டுவது சரியாகப்படவில்லை.ராஜாக்கள் கட்டின பழைய கோவில்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இனியாவது புதிய கோவில்கள் ஒரே இடத்தில் உருவாகுவதை அனுமதிக்க வேண்டுமா என்பது என் கேள்வி. ...

1 comment:

  1. I always havehis thought, why not we take care of somany beautiful temples instead of building new ones, It should actually come from the mouth of some aachryan or a spiritual leader. Here in hyd, i have witnessed a lots ofpeople following exactly what chinna jeeyar swami tells, some spiritual revolution is required , u article should be circulated among lots of people, let me make a try

    ReplyDelete