Saturday, October 23, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர் -2

இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.பல வருடங்களுக்கு முன்னாள் நடந்தது.பம்பாயில் விக்டோரியா டெர்மினஸ் ல் கல்கத்தா கிளமபவேண்டிய ரயிலின் முன்னால் நின்று கொண்டிருந்தேன்.அன்று எப்படியும் கிளம்பவேண்டிய சூழ்நிலை.வண்டி கிளம்பும் அரை மணி முன்னர் முதல் வகுப்பு பரிசோதகர் கையில் காகிதங்களுடன் வந்து சேர்ந்தார்.

"வணக்கம்,இன்று கல்கத்தாவிற்கு அவசியமாக செல்லவேண்டும்.ஒரு இடம் கொடுக்கமுடியுமா?" என்று கேட்டேன்

"உங்கள் பெயர் காத்திருக்கும் லிஸ்டில் உள்ளதா?'என்றார்.

i"இல்லை டிக்கட்டே எடுக்கவில்லை.சட்டென்று கிளம்பும்படியாக நேர்ந்தது" என்றேன்

"sorry, காத்திருப்பவர்கள் நிறைய பேர் லிஸ்டில் இருக்கிறார்கள்.வேறு வண்டி பாருங்கள்" என்றார்.

"என்ன விலையானாலும் பரவாயில்லை.கொஞ்சம் தயவு பண்ண வேண்டும்"என்றேன்.

"நீங்கள் சொல்வது புரியவில்லையே"என்றார்.

ஒரு அசட்டு சிரிப்புடன் "டிக்கட்டுக்கு எவ்வளவு மேலே ஆனாலும் செலவழிக்க தயாராக உள்ளேன் என்று சொன்னேன்"என்றேன்

"உங்களிடம் பிளாட்பாரம் டிக்கட் இருக்கிறதா? என்றார்.

சரி, ஆள் மசிந்து வருகிறார் என்கிற பெருமிதத்தில் 'இல்லை,எடுக்க வில்லை அவசரத்தில்" என்றேன்.

"பத்து வரை எண்ணுவேன்.அதற்குள் இங்கிருந்து வெளியே செல்லாவிட்டால் உங்களை ரயில்வே போலீசிடம் ஒப்படைப்பேன்.கடுமையாக சொல்கிறேன்.லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்று உங்கள் மேல் குற்றம் சாற்றுவேன்.get out I say " என்று சத்தத்துடன் சொன்னார்.

உடனேயே வெளியில் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தேன்.என்ன பண்ணுவது, எப்படி போய் சேருவது என்கிற குழப்பத்தில். வண்டி கிளம்பியவுடன் அவர் வெளியே வருவதை பார்த்தேன். நல்ல மனிதர் மனதை புண்படுத்தி விட்டேனே என்று ஒரு குற்ற உணர்வு உள்ளுக்குள்ளே.

அருகில் வந்தவுடன் எழுந்து நின்று “sorry,தப்பிதமாக நடந்து கொண்டு விட்டேன்.என்னை மன்னிக்கவேண்டும்.அவசரமாக போய்சேர வேண்டும் என்கிற உந்துதலால்.அப்படி தவறு நடந்து விட்டது." என்றேன்

"பரவாயில்லை.அப்படி என்ன அவசரம்?"என்றார்

'மனைவிக்கு ஜுரம் என்று போன் வந்தது.வேறு யாரும் உதவிக்கு இல்லை" என்றேன்

அடுத்த வண்டி கொஞ்ச நாழியில் கிளம்பும்.அதில் கூட்டம் அவ்வளவா இராது.இடம் இருந்தால் கட்டாயம் தருகிறேன்.ஆனால் எல்லா பரிசோதர்களையும் லஞ்சம் வாங்கும் பேர்வழிகளாக எண்ணாதீர்கள்.ஒரு சிலர் நேர்மையாக இருக்கத்தான் முயற்சி பண்ணுகிறோம்.எங்களை கெடுத்து விடாதீர்கள்." என்றார்.

என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததை பார்த்து "sorry,தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"என்றார்
.
இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது. .
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
.

2 comments:

  1. unmai... aanaal indraya kaala kattaththil "nalla manitharkal" endra vaarthaikku "pizhaikkath theriyaathavarkal" endra puthu arthamum ullathu enbathu thaan varuththm!

    ReplyDelete
  2. //என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததை பார்த்து "sorry,தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"என்றார்
    //

    அழகான வார்த்தை ப்ரயோகங்கள்!..:) அருமை!

    ReplyDelete