Wednesday, October 20, 2010

பெருமாள் கோவில் பொங்கல்

அலமேலு மார்கழி மாதத்தில் ஒரு நாள் தவறாமல்  தினம் அதிகாலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவாள். குளித்து விட்டு ச்ரத்தையாக நெய்யும் முந்திரியும் சேர்த்து வெண் பொங்கலை பகவான் ஆராதனத்துக்கு தயார் செய்து விடுவாள்.அவள் கணவனும் தவறாமல் பெருமாளுக்கு நிவேதனம் செய்துவிடுவார்.

"சேஷாத்ரி,,எழுந்துக்கோ, மணி ஐந்தேமுக்கால் ஆறது. .பல் தேச்சுவிட்டு வா.பொங்கல் சாப்பிட." என்றாள்

"இப்போ பொங்கல் வேண்டாம். .பிடிக்கலை" னு பதில் வந்தது.

"என்னமோ எப்போதும் தூக்கம்"னு சலிச்சு கொண்டாள்.

டாண்னு 6 மணிக்கு பக்கத்து கோவிலிலேந்து மணி அடிக்கற சப்தம் கேட்டது..உடனே அலறி புடைத்துக்கொண்டு சேஷாத்ரி எழுந்து பல்லை தேச்ச கையோடு கோவிலுக்கு ஓடினான். அங்கு கூட்டத்தில் முன்னுக்கு தன்னை தள்ளிக்கொண்டு பிரசாதத்தை வாங்கிவிட்டான் .அரைமணிக்குள்ளே கையில் எலுமிச்சம் பழம் அளவில் பொங்கலை வாங்கிகொண்டு வந்தான்..

"ஏண்டா சேஷாத்ரி, இங்க வீட்டுலே நல்ல பொங்கல் நிறைய நெய்யை கொட்டி முந்திரியும் போட்டு பண்ணி இருக்கச்சே வேண்டாம் நு சொல்லிவிட்டு, கோவிலிலேந்து தம்மாதூண்டு வாங்கிண்டு வரயே.. எனக்கு ஒன்னும் புரியலையே ." என்றாள் அலமேலு.

"அம்மா,,தப்பிய எடுத்துக்காதே, கோவில் பொங்கலுக்கு உள்ள வாசனை உன்னோட பொங்கலிலே இல்லையே' என்றான்.

நெய்யும் இல்லாம ஒண்ணுமில்லாம கோந்து மாதிரி இருந்தது. .அலமேலுக்கு ஒரே மன உளைச்சல்..என்ன காரணமாக இருக்கலாம் சேஷாத்ரியின் மனோபாவத்திற்கு என்று யோசித்தாள்.

இலவசத்தில இருக்கிற ஈர்ப்போ அல்லது தெய்வ பிரசாதம் என்கிற எண்ணமோ அல்லது .போட்டி போட்டு கிடைப்பதில் உள்ள உத்சாகமோ அல்லது வாஸ்தவமாகவே கோவில் பொங்கல் தன்னுடையதைவிட நன்றாக உள்ளதோ என்று பல காரணங்களை அலசினாள். .சரியான விடை கிடைக்கவில்லை அவளுக்கு.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்,பாவம்..
....
.

8 comments:

  1. edhuvumey deivathukku neivedhyam pannittu sapdarache taste alaadhithaan

    ReplyDelete
  2. A blasphemous comment:
    If you taste (small portion) it would taste good (- appetizer), If you eat (large portions) the taste somehow disappears.
    - Chinnaraj

    ReplyDelete
  3. avaavaa manobhaavaththai poruththu irukkunnu thonrathu.

    Poatti manappanmaiyum kaaranamaaga irukkalaam! Paavam Alamelu!

    ReplyDelete
  4. Kovil prasadham...does have a special taste even though it does not have the required amount of ghee or any addons.
    I love the curd rice given in krishna temple in Nanganallur...wow....

    ReplyDelete
  5. Perumaal prasaadathukku niharundo..

    ReplyDelete
  6. Kudi irrundhu prasadathai anubhavipadhu eppodhum special thaan.
    Nice story

    ReplyDelete