Saturday, October 16, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர்

ராதா தினமும் கோவிலில் அதே இடத்தில் அதே தூணுக்கு அடியில் அந்த மூதாட்டியை. பார்க்கிறாள்..கையில் ஏதோ புத்தகம். வாய் எப்பொழுதும் முணுமுணுத்துக்கொண்டு இருக்கும்..வயது எண்பதுக்கு குறைவில்லாமல் இருக்கலாம். களையான முகம் பார்க்க வசதியான குடும்பம் போல தெரிகிறது.. ஆனால் கண்களில் ஒருசோகம்.அதிகம் சன்னதிகளில் நிற்பதை பார்த்ததில்லை.ராதாவின் மனதில் ஒரு நெருடல்.

'சித்த வாடியம்மா. .கொஞ்சம் ஒத்தாசை பண்ணு. தலையை கிர்ர்ருன்னு அடிக்கறது' என்று குரல் கேட்டு ராதா திரும்பினாள் .பாட்டி எழுந்துக்கொள்ள முயற்ச்சி பண்ணிக்கொண்டு இருப்பதை பார்த்து கை கொடுத்தாள்..

'"ரொம்ப நல்ல பொண்ணு.உன்னோட பேர் என்ன? "என்று வினாவினாள்

அப்புறம் தினம் ஒரு சிரிப்பு, ஒரு குசலம் இப்படியே நெருக்கமாகிவிட்டார்கள். பாட்டிக்கு ராதாவை மிகவும் பிடித்து விட்டது.அவளுக்கும் பாட்டியின் மேல் ஒரு அனுதாபம் கலந்த அபிமானம்..

"உனக்கு எவ்வளவு குழந்தைகள்? உன் வீடு இங்க பக்கத்திலேயேதான் இருக்கா?ஒரு நாள் அழைச்சுண்டு போறயா?" என்று பாட்டி கேட்டாள்.

'இப்பவே வாருங்களேன் பாட்டி... ரொம்ப பக்கத்துல தான். இருக்கு . இங்கயே இருங்க,.ஒரு ஆட்டோ கூட்டிண்டு வந்துடறேன்" ன்னு சொன்னாள்.

"ஆட்டோ வெல்லாம் வேண்டாம் வண்டி இருக்கு'நு பாட்டி சொன்னாள்.

வெளில கப்பலை போல ஒரு கார் நின்று கொண்டு இருந்தது..டிரைவர் மிகவும் பவ்யமாக கதவை திறந்து வசதி பண்ணினார்..ரொம்ப பணக்காரா போல என்று ராதா நினைத்தாள்.அவள் வீடோ ஒரூ மூணு ரூம் ஒண்டு குடித்தனம்.அதுல இருட்டு வேர.கொஞ்சம் தயக்கத்தோடு உள்ளே அழைத்து சென்றாள்.பாட்டி உட்கார....ஒரு ஸ்டூலை இழுத்து போட்டாள்

ஒடிசலா ஒரு பொண்ணு நின்று கொண்டு இருந்தாள்..

"இவள் என்ன பண்ணிண்டு இருக்காள்னு பாட்டி கேட்டாள்

பன்னிரண்டு முடிச்சாச்சு.இஞ்சினீரிங் படிக்கணும்னு மாதங்கி ஆசைப் படறாள். .காலேஜ்ல நிறைய பணம் கட்ட சொல்றா..நாங்க சாதா படிப்பு போறும்னு சொல்றோம். .கேக்கமாட்டேன்னு அடம் பிடிக்கறா

எந்த காலேஜ்? இவ பேரு என்ன? .கம்ப்யுடரா ? என்று கேட்டு தெரிந்து கொண்ட பிறகு கிளம்பிவிட்டாள்.

கிட்டதட்ட ராதா பாட்டியை இரண்டு வாரத்துக்கு மேலே கோவிலில் பார்க்கவில்லை.என்ன காரணமோ உடல் நலம் சரி இல்லையோ என்று யோசனை அவளுக்கு. .அர்ச்சகரை கேட்டால் அவருக்கும் தெரிய வில்லை...

திடீர் என்று ஒரு நாள் இஞ்சினீரிங் காலேஜ்லிருந்து வரச்சொல்லி போன் வந்தது..பணம் கட்ட வசதி இல்லைன்னு சொல்லியும் மறுபடி கூப்பிட்டு அனுப்பித்தால் எப்படி என்று யோசனையோடு ராதா பொண்ணை கூட்டிக்கொண்டு போனாள்..அங்கு அவளுக்கு ஒரு ஆச்சர்யம் காத்து கொண்டு இருந்தது. .நான்கு வருஷ படிப்புக்கும் யாரோ முழு பணத்தை கட்டிவிட்டதாகவும் பேரை வெளியிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டதாக சொன்னார்கள்..
யாராக விருக்கும் ஏகப்பட்ட பணமாச்சே ன்னு ராதாக்கு மன உளைச்சல்.. பாட்டியாகத்தான் இருக்கும் வேற பணக்காரா யாரும் தனக்கு தெரியாதேன்னு ஒரு சந்தேகம்

கோவில் ஆபீசில் பாட்டி விலாசம் கிடைத்தது.உடல் நலம் எப்படி இருக்கோன்னு விசாரிக்கலாமென்று ராதா அங்கு சென்றாள். பெரிய பங்களா.வாசலில் கூர்க்கா.யாரு,யாரை பார்க்கணும் என்று கேள்வி..பாட்டி பேரும் தெரியாது..எப்படியோ உள்ளே அனுமதிக்க பட்டாள்.யாரோ ஒரு பெண்மணி " நீங்க யாரு,பாட்டிக்கு உடல் ரொம்ப மோசமா இருக்கு.பாரிச வாயு வந்து பேச்சு இல்லை.கால்கள் இடது கை அசைக்க முடியலை..ஞாபகம் இருக்கு.ஒரே ஒரு நிமிஷம் பார்த்து விட்டு வந்துடனும்" என்று ..முன் கூட்டியே சொல்லி உள்ளே அறைக்கு கூட்டி சென்றாள்.

"பாட்டி,உங்களை பார்க்க யாரோ வந்து இருக்கா. கோவிலில் பரிச்ச்சயமாம். .ராதான்னு பேரு."என்று சொன்னாள்.

பாட்டிக்கு சற்று புரியவில்லை.கிட்ட வரும்படி கையை அசைத்தாள்

"பாட்டி ,எப்படி இருக்கு இப்பொழுது ?.மூன்று வாரத்துக்கு மேல ஆச்சு உங்களை பார்த்து. இபோதான் விலாசம் கிடைத்தது. நான்தான் ராதா.தெரியறதா? என்று வினாவினாள்..

ராதாவின் முகத்தை தடவி கொடுத்தபடி பொண்ணு எங்கே ன்னு ஜாடையால் கேட்டாள்.
"நாளைக்கு அழைத்து கொண்டு வருகிறேன்' என்றாள்

அந்த பெண்மணி போறும் பேசியது என்று வெளியே கூட்டி சென்றாள்.

மறு நாள் சனிக்கிழமை.பொண்ணை கூட்டிக்கொண்டு ராதா பாட்டியை பார்க்க சென்றாள். .வாசலில் ஒரே கார்கள்.மனுஷா கூட்டம். திக்கென்றது ராதாவிற்கு தயங்கியபடி கூர்க்காவின் அருகில் சென்றாள்."பாட்டி kal ராத்கோ மர்கயா'ன்னு சொன்னான். துக்கம் பீரிட்டு கொண்டு வந்தது.

இப்படியும் இந்த காலத்தில் விளம்பரமில்லாது ஒரு பெண்மணியா?தன்னோட உபகாரம் வெளில யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் ஒரு தீவிரம்..எப்பேர்பட்ட இளகிய தாராள மனம் இப்படி ஆகி விட்டதே என்று. அழுகை அடக்கமுடியாமல் வந்தது.. தலைப்பால் வாயை மூடிக்கொண்டு பெண்ணோடு வேகமாக வீட்டுக்கு சென்றாள்.
"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட் டாங்கில் உள்ள படி" .
. ..

5 comments:

  1. அந்த பாட்டி விட்டு சென்றுள்ள தாக்கம் பெரிது.

    பி.கு. தமிழ் பதிவு ஆரம்பித்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. that is a very nice story Sir! பகவான் மனுஷ ரூபேண என்பது போல் பாட்டி ராதாவுக்கு உதவி செய்திருக்கிறார்

    ReplyDelete
  3. such sweet patiamma. hard to see though in this present world...

    ReplyDelete
  4. ம்ம்.. நல்ல மனிதர்கள் இப்படித்தான் சொல்லாமல் உதவி சொல்லாமல் கிளம்பிப் போய் விடுகிறார்கள்.

    ReplyDelete
  5. இன்னும் கொஞ்சம் புதுசா எதிர்பார்க்கிறேன்!கொஞ்சம் அவசர அவசரமா எழுதினா மாதிரி இருக்கு!

    ReplyDelete