Wednesday, October 20, 2010

பொறாமை

நான் பிறந்த போது அதே வாரத்தில் பாட்டி வீட்டில் இன்னும் மூன்று குழந்தைகள் வேறு உறவினர்களுக்கு பிறந்ததாம். நான் மட்டும் மா நிறத்திற்கும் கம்மி. . .அம்மா அப்படிதான் சொல்லுவாள். கருப்புன்னு சொல்லமாட்டாள். எல்லோரும் குழதைகளை பார்க்க வருகையில் மற்ற குழந்தைகளை கையில் எடுத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டு கொஞ்சுவார்கள்.. என்னுடைய கையில் 2 ரூபாயை திணித்து விட்டு சென்று விடுவார்கள்.அம்மா மட்டும்தான் முத்தமிடுவாள். .அப்போதே பொறாமைக்கு மனதில் வேர் ஊன்றி வித்து விட்டது!!!. .அப்புறம் கேட்பானேன். .எதற்கும் பொறாமை. தான்.நான் நான்காவது குழந்தை. ஆண்டுநிறைவிற்கு காது குத்தி ஈர்க்குச்சி தான் போட்டார்கள். மற்ற குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள் மேள தாளத்தோட . ஊரை கூட்டி பெரிது படுத்தினார்கள்.

நான் முதலில் படித்தது கார்பொரேஷன் ஸ்கூலில். .அவர்களோ ப்ரைவேட் ஸ்கூலில். டீச்சர் என்னை கடைசி பெஞ்சில் உட்கார வைத்தாள்.கருப்புன்னா கடைசீயா?...எனக்கு முந்தைய வருஷம் அண்ணன் படித்த பழைய புத்தகங்கள்தான்.மற்றவர்களுக்கோ புத்தம் புது வாசனையோடு உள்ள புது புஸ்தகங்கள்..என்னை விட யாராவது ஒரு மார்க் மேல வாங்கினாக்கூட பொறாமை படுவேன்.

ஏழாவதோ அல்லது எட்டாவதோ கூட அன்னபூரணி படித்து கொண்டிருந்தாள்.அழகி என்று ஒரு ஞாபகம்.அவள் மற்றவர்களை விட என்னுடன் அதிகம் பேசியும் பழகியும் வந்தாள். இருந்தாலும் அவள் யாரிடமாவது ஒரு நிமிடத்திற்கு மேல் பேசினால் எனாகு ஒரே எரிச்சல் வரும். அந்த சின்ன வயதிலேயே.

எனக்கு இன்ஜினீயரிங் படிக்க வசதி இல்லை.படித்தவர்களை கண்டால் ஒரு புழுங்கல்.நல்ல வேலை கிடைத்தது.நிறைய சம்பளம்.இருந்தும் என்னுடன் படித்தவர்கள் அமெரிக்காவிற்கு சென்றால் ஒரு நெருடல் மனதிற்குள்.

என் மனைவி . படித்தவள் சுமாரான அழகு உள்ளவள். சாதுர்யமாக பேசுவாள்..அவள் கூட வேலை செய்பவர் போனில் பேசினால் ஒரு சந்தேகம் கலந்த பொறாமை.. எனக்கு பிறந்தது மூன்றும் பெண்கள்.. கூட பிறந்தவர்களுக்கு எல்லாம் ஆண் பிள்ளைகள்.இதில் பொறாமை பட என்ன இருக்கு.இருந்தாலும் உள்ளூர அவர்களிடம் ஒரு வெறுப்பு.

என் பெண்கள் இருவரும் பாட்டு கற்றுக்கொள்ள மாட்டேன்னு ஒரு பிடிவாதம்..அண்ணன் பிள்ளைகள் வேலையை தவிர ஒருவன் கச்சேரி பண்ணுகிறான். இன்னொருவன் வயலின் வாசிக்கறான்..அதிலும் பொறாமை..

ஆபீசில் வளைந்து கொடுக்க தெரியவில்லை.ஓரளவுக்கு மேல் உயர முடியவில்லை.மற்றவர்கள் சாதாரணமான திறமையோடு என்னைவிட பெரியபதவிகளுக்கு உயர்த்தபட்டார்கள்..ஓய்வு பெற்றவுடன் என்னை வைத்துக்கொள்ளவில்லை.சொத்து அதிகம் சேர்க்க முடியவில்லை.ரெண்டு பெண்கள் கல்யாணம்.ஊருக்கு வெளியே ஒரு சின்ன வீட்டில் குடித்தனம்.மற்றவர்களோ பங்களாவில் வாசம். கொடுப்பினை இல்லையென்று பொறாமை.

.வயது ஆகிவிட்டது. தம்பிகள் இறந்துவிட்டார்கள். பகவான் அதிலும் பாரபட்சமா? என்னை கொண்டு போகவில்லையே என்று ஒரு ஆதங்கம். வாழ்க்கை பூராவும் பொறாமை பட்டே கழித்தாயிற்று..
பொறாமை என்று வெளியே சொல்லாமல் உள்ளே பலர் புழுங்குவார்கள்,. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?தலை எழுத்தா அல்லது பூர்வ ஜன்ம வினைகளா? ஞானிகளை தவிர சாதாரண பட்டவர்களால்.தலை விதி என்று பொறாமை படாமல் இருக்க இயலுமா? வாயை திறந்து ஏதாவது சொல்லுங்களேன். .

3 comments:

  1. ஞானிகள் தவிர எல்லாருமே பொறாமைப்படாமல் இருக்கலாம். அது சாத்தியமே. மனதில் நெருடல் வரும்போதுதான் பொறாமை வரும். கல்மிஷம் இல்லாமல் இருக்கும்போது பொறாமை எங்கே வரும் ?

    ReplyDelete
  2. இயலாமை - பொறாமைக்கு வழி வகுக்கிறதோ.... ம்ம்ம்ம்..... நல்ல கதை.

    ReplyDelete