Sunday, October 24, 2010

ஓட்டை வாய்


ஒரு தடவை அவரை என்னோட ச்நேகிதி வீட்டில் பார்த்து இருக்கிறேன்..நல்ல விதமான புடவைகள் விதவிதமான டிசைன்களில் நியாயமான விலைக்கு கொடுத்து இருக்கிறார். நைய்பவர்களிடமிருந்தே வாங்குவாராம்.

ஒரு நாள் கடைத்தெருவில் பார்த்தேன்.' அம்மா, நல்ல சரக்கு கைவசமிருக்கு.. விலாசம் கொடுத்தால் வீட்டுக்கு கொண்டு வருகிறேன்.'என்றார்.

"விலாசம் இதுதான். ஆனால் இப்போது வேண்டாம்.ரெண்டு நாட்களுக்கு ஊரில் இருக்க மாட்டோம்.வாரக்கடைசியில் வாருங்கள்' என்றேன்

ஊரிலிளிருந்து திரும்பியதும் வீடு சுத்தமாக களவாடபட்டிருந்தது.ச்நேகிதியை விசாரித்தபொழுது,அந்த ஆள் யாரென்றே தனக்கு தெரியாது என்றாள்.

2 comments: