Wednesday, October 27, 2010

ஒரு தெய்வீக அனுபவம்

எனது உறவினர் ஒருவருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி டாக்டர்கள் அவருக்கு அதிக நாட்கள் இல்லை என்பதை நேரடியாகவே சொல்லி விட்டார்கள்.அதனால் மனம் தளரவில்லை.ஆனால் தான் இதுவரை போகாத மிகவும் விரும்பிய கோவிலுக்கு செல்ல விரும்பினார்..முடியாத உடல் நிலையிலும் தன மனைவியை கூட அழைத்து கொண்டு ரயிலில் பிரயாணம் செய்தார்..அங்கோ அவர் எதிர் பாராத கூட்டம்.இருந்தும் முடியாத நிலையில் எப்படியோ க்யூவில் நின்று பகவானை தரிசிக்க அருகில் சென்றார். .கூட்ட நெரிசல் அவரை ஒரு சில க்ஷணங்கள் கூட கிட்ட இருந்து தரிசிக்க முடியாமல் செய்தது... கூட்ட.ம் அவரை தள்ளி கொண்டு வெளியே வரும்படி செய்து விட்டது...இவ்வளவு கடின பிரயாணம் மேற்கொண்டும் சரியாக பார்க்கவும் ,பிரார்த்தனை செய்யவும் முடியவில்லையே என்று ஒரே ஏமாற்றம்..மன வருத்ததோடு தன குறையை பகவானிடம் சொல்லிக்கொண்டு ஊருக்கு திரும்புவதற்கு ரயிலடிக்கு கிளம்பலானார்.

அந்த சமயம் ஒரு வயதான நபர் அருகில் வந்து "சார், ஏன் முகம் வாடி இருக்கு? பகவானை சரியாக தரிசிக்க முடியவில்லையா?குறையோடு திரும்ப வேண்டாம்.என்னுடன் வாருங்கள் ஒரு நொடியில் பகவானை கண் குளிர நன்றாக தரிசனம் செய்து வைக்கிறேன்.ரயிலுக்கு நிறைய அவகாசமிருக்கு. .கூட வாருங்கள்'என்று கை பிடித்து இழுக்காத குறையாக அழைத்து சென்றார்.உறவினருக்கு அவர் யார் ,எப்படி அவருக்கு தன் வருத்தம் தெரியும் என்று பல யோசனைகளோடு கூட சென்றார்.மனைவியும்உடனிருந்தாள்.ஒரு க்யு ஒரு கூட்டம இல்லாமல் நேரே எல்லா வாசல்களையும் தடங்கல் இல்லாமல் கடந்து நண்பரை வேகமாக அழைத்து சென்றார்..யாரும் தடுத்து நிறுத்தவுமில்லை.பெரிய அதிகாரியாகவும் தென்படவில்லை.

பகவானுக்கு மிக அருகில் நிறைய நேரம் ஆசை தீர தரிசனம் செய்தும் பிரார்த்தித்து கொண்டும் மன நிறைவோடு அந்த மனிதரிடம் நன்றி சொல்ல திரும்பிய் போது அவரைக் காணவில்லை...உறவினருக்கு சொல்லமுடியாத ஒரே பக்தி பரவசம், .அங்கும் இங்கும் தேடியும் பயனில்லை.மாயமாய் மறைந்து விட்டார். .மனம் புல்லரித்தது.பகவானே அல்லாமல் வேறு யாராலும் இப்படி தங்கு தடையில்லாமல் இந்த கூட்டத்தில் தரிசனம் செய்துவைக்க முடியாது...என்று திடமாக நம்பினார்.

ஊருக்கு திரும்பியபின் பார்ப்பவர் எல்லோரிடமும் இதையே பேசிகொண்டிருந்தார்.இரண்டு நாட்கள் கழித்து கனவில் " பகவான் உங்கள் கவலையை தீர்த்து வைத்தாரா? இப்பொழுது திருப்தி தானே? .நன்றாக தரிசனம் ஆயிற்றா?குறை ஒன்றும் இல்லையே?எல்லாம் நல்லபடியே நடக்கும்"என்று அந்த பகவானே அருள் புரிந்தார்.இது நடந்து சில மாதங்களிலேயே அந்த உறவினர் ஒரு மன திருப்தியோடு மறைந்தார்.

ஈஸ்வர சம்பந்தப்பட்ட எதுவுமே நம் புத்திக்கு அப்பாற்பட்டது.அனுபவரீதியாகத்தான் அதை புரிந்துகொள்ளமுடியும்.இந்த சம்பவத்தை காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல் ஒரு கதை என்று எள்ளி நகையாடமுடியாது..பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளின் மீது வாஸ்தவமான தீவிரமான அன்போ அல்லது பக்தியோ இருந்தால் எதுவும் வாழ்க்கையில் நடக்கும்...

1 comment:

  1. Very interesting! நமக்கு புரியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன...... ம்ம்ம்ம்....

    ReplyDelete